பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கில் தேசிய மாணவர் படை பயிற்சிமுகாம்

1 Min Read

வல்லம், டிச.17- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர்கள் கலந்து கொண்ட தேசிய மாணவர் படை பயிற்;சி முகாம் 21.11.2024 முதல் 30.11.2024 வரை நடைபெற்றது.
இம்முகாமில் சுமார் 500
என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
34 (TN INDEP COT NCC UNIT)அய் சேர்ந்த என்.சி.சி அதிகாரிகள் மற்றும் ராணுவவீரர்கள் மாணவர்களுக்கு பயிற்;சி அளித்தனர்.
இந்த வருடாந்திர பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
‘Drill’ போட்டியில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்; கல்லூரி மாணவர்கள் செல்வன் அஸ்வின் முத்துக்குமார், செல்வன் தினுபருதீன் ஆகிய இருவரும் கலந்து கொண்டு முதலிடம் வென்றார்.
முதலிடம் வென்ற மாணவர்களை பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா பாராட்டினார். இந்நிகழ்வில் துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *