முல்லைப் பெரியாறு அணைக்கு கட்டுமானப் பொருள்கள் கொண்டு செல்ல கேரளம் அனுமதி

viduthalai
1 Min Read

முல்லைப் பெரியாறு, டிச.17- தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புக்கு கட்டுமானப் பொருள்களை கொண்டு செல்ல கேரள வனத் துறை அனுமதி வழங்கியதையடுத்து, 2 லாரிகளில் நேற்று முன்தினம் (15.12.2024) பொருள்கள் ஏற்றிச் செல்லப்பட்டன.

முல்லைப் பெரியாறு அணையில் ஆண்டுதோறும் பருவமழைக் காலங்களில் பராமரிப்புப் பணிகள் செய்வது வழக்கம். இதன்படி, தமிழ்நாடு பொதுப் பணித் துறையினர் கடந்த 4-ஆம் தேதி 2 லாரிகளில் எம். சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் சென்றனா்.

அப்போது, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், வல்லக்கடவு பெரியாறு புலிகள் காப்பக வனத் துறை சோதனைச் சாவடி வழியாக லாரிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனிடையே, 6 நாள்களாக காத்திருந்த லாரிகளில் பழுது ஏற்பட்டது.

பின்னா், கடந்த 9-ஆம் தேதி பழுது சரி செய்யப்பட்டு தமிழ்நாட்டுப் பகுதிக்கு 2 லாரிகளும் கொண்டுவரப்பட்டன.
இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா, தமிழ்நாடு அரசின் நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு தகவல் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிக்கு தமிழ்நாடு பொதுப் பணித் துறையினா் (நீா்வளத் துறை) கட்டுமானப் பொருள்களை கொண்டு செல்ல கேரள வனத் துறையினா் அனுமதி வழங்கினா்.

இந்த நிலையில், வல்லக்கடவு வழியாக முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புக்கு 2 லாரிகளில் கட்டுமானப் பொருள்கள் ஏற்றிச் செல்லப்பட்டன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *