4 மாதத்தில் 4200 புதிய பேருந்துகள் அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசு, தமிழ்நாடு

சென்னை, ஜூலை 22 – ‘4 மாதத்தில் 4200 புதிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப் படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, மற்றும் குளிரூட்டப்பட்ட பணியாளர்கள் ஓய்வு அறைகள் திறப்பு விழா அய்யப்பன் தாங்கல் பேருந்து நிலைய வளாகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 27 பேருக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் சிவசங்கர், “தமிழ்நாட்டில் 4200 புதிய பேருந்து கள் 4 மாதத்தில் நடைமுறைக்கு வர உள்ளது. டபுள் டக்கர் பேருந்து இயக்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மெட்ரோ பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பணிகள் எல்லாம் முடிந்த பின் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். 

விலைவாசி உயர்வு குறித்து பா.ஜ.க கூட்டணியில் உள்ள அ.தி.மு.கவினர் பா.ஜ.கவை கண்டிக்காமல் அவர் கள் கட்சியின் இருப்பை காட்டுவதற்காகப் போராட்டம் நடத்துகின்றனர்” என்றார். 

அ.தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் மேனாள் அமைச்சர் திண் டுக்கல் சீனிவாசன் மீண்டும் மு.க.ஸ்டாலினை முதல மைச்சர் ஆக்குவோம் எனக் கூறியது குறித்து, அமைச்சர் தா.மோ.அன்பரசன்,” திண்டுக்கல் சீனிவாசன் கூறியது உண்மை தான்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *