ராமநாதபுரத்தில் த.மு.மு.க. ஆா்ப்பாட்டம்

viduthalai
1 Min Read

ராமநாதபுரம், டிச.16- வழிபாட்டுத் தலங்கள், வக்ஃப் வாரிய சொத்துகளை பாதுகாக்கக் கோரி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில், ராமநாதபுரத்தில் 13.12.2024 அன்று ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புகா் பேருந்து பணிமனை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநில துணைப் பொதுச் செயலா் எஸ்.சலிமுல்லாகான் தலைமை வகித்தாா். மே 17 இயக்கத் தலைவா் திருமுருகன் காந்தி கண்டன உரையாற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தின் போது வழிபாட்டுத் தலங்கள், வக்ஃப் வாரிய சொத்துகளை பாதுகாக்கக் கோரி முழக்கமிடப்பட்டது.
இதில் மாநிலச் செயலா் எம்.சாதிக்பாட்ஷா, தமுமுக நிா்வாகிகள் அப்துல்காதா்மன்பயி, எம்.உசேன்கனி, மு.சம்சுதின் சேட், ஷான்ராணி ஆலிமா, தெற்கு மாவட்டத் தலைவா் எம்.வாவா ராவுத்தா், மாவட்டத் தலைவா் எஸ்.சேக் அப்துல்லா, மேற்கு மாவட்டத் தலைவா் பிரிமியா் இப்ராஹிம், மத்திய மாவட்டத் தலைவா் எம்.பட்டாணி மீரான், புதுக்கோட்டை மாவட்டத் தலைவா் பி.சேக் தாவுதீன், சிவகங்கை மாவட்டத் தலைவா் எம்.டி.எஸ்.துல்கருணை சேட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *