மகத்தான மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் கொடை

1 Min Read

ஈரோடு, ஜூலை 22 – ஈரோடு அருகே உள்ள முத்தம் பாளையத்தை சேர்ந்த 34 வயது இளைஞர் ஒருவர், கடந்த 3 நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்த விபத் தில் காயம் அடைந்து சிகிச்சைக்காக கோவை யில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

பின்னர் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் மூளைச் சாவு அடைந்தார். இத னால் அவருடைய உடல் உறுப்புகளை கொடை அளிக்க குடும்பத்தினர் முன் வந்தனர். 

இதைத்தொடர்ந்து பெருந்துறை அரசு மருத் துவ கல்லூரி மருத்துவ மனை உயர் மருத்துவ குழுவினர், மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலில் இருந்து இதயம், 2 சிறுநீரகங்கள், 2 கண் கள் ஆகியவற்றை பாது காப்பாக எடுத்து சென்னை, கோவை, சேலம், ஈரோட் டில் உள்ள மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மூளைச்சாவு அடைந்தவரின் உட லுக்கு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி முதல் வர் டாக்டர் வள்ளி சத் தியமூர்த்தி மற்றும் மருத் துவமனை மருத்துவர்கள் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். 

மூளைச்சாவு அடைந்த வரின் உடலில் இருந்து உறுப்புகளை பாதுகாப்புடன், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் எடுக்கப்படுவது 2ஆ-வது முறை என்பது குறிப்பி டத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *