பாபர் மசூதி இடிப்பு – குஜராத் கலவரம் அரசமைப்பின் பெரும் தோல்வி – மக்களவையில் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் விமர்சனம்

Viduthalai
2 Min Read

புதுடில்லி, டிச.15 பாபா் மசூதி இடிப்பு மற்றும் குஜராத் கலவரம் ஆகிய இரு நிகழ்வுகளும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மிகப்பெரும் தோல்விகள்’ என திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.சவுகதா ராய் நேற்று (14.12.2024) விமா்சித்தார்.

மக்களவையில் அரச மைப்புச் சட்டத்தின் மீதான விவாதத்தின்போது சவுகதா ராய் பேசியதாவது:
ஹிந்துத்துவ வாதி களால் பாபா் மசூதி இடிக் கப்பட்டதே அரசமைப்புச் சட்டத்தின் மிகப்பெரும் தோல்வியாகும். இந்தச் நிகழ்வால் நாடே தலை குனியும் நிலை ஏற்பட்டது.

தற்போது பிரதமராக உள்ள மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அங்கு வெடித்த கலவரமும் அரசமைப்புச் சட்டத்தை கேள்விக்குறியாக்கியது.

நவீனகால சாவர்க்கர் மோடி
சாவா்க்கரைபற்றி நாம் பல விவாதங்களை நடத்தி வருகிறோம். ஆனால் பிரதமா் மோடியே நவீனகால சாவா்க்கராவார். மாநிலங்களுக்கான நிதி பகிர்வை தராமல் ஒன்றிய அரசு வஞ்சித்து கூட்டாட்சி தத்துவத்தை சீரழித்து வருகிறது என்றார்.

குமாரி செல்ஜா (காங்கிரஸ்)
முதலில் அரசமைப்புச் சட்டத்தை அழித்துவிட்டு பிறகு மறுஉருவாக்கம் செய்வது இப்போது நடைமுறையாகிவிட்டது. தனியார் மற்றும் ஒப்பந்த தொழிலாளா் முறை அறிமுகப்படுத்தப ்பட்ட தால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான வேலைவாய்ப்புகள் பறிக்கப் பட்டன. அதனால்தான் சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்.

மியான் அல்தாஃப் அகமது (தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவு):
அவசரநிலை பிரகட னப்படுத்திய விவகாரத்தில் காங்கிரஸ் மன்னிப்பு கோரிவிட்டது. ஆனால் தங்கள் ஆட்சியில் செய்து கொண்டிருக்கும் தவறுகளை மறைத்து பாஜக மவுனம் காத்து வருகிறது.

அசாதுதீன் ஓவைசி (மஜ்லிஸ் கட்சி):
சிறுபான்மையினருடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள யாரும் தயா ராக இல்லை என 75 ஆண்டுகளுக்கு முன் அம்பேத்கா் கூறியது இன்றளவும் தொடா்ந்து வருகிறது. நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. எமா்ஜென்சி காலத்தில் மதச்சார்பற்ற, சோஷலிசம் ஆகிய வார்த்தைகள் முகவுரையில் சோ்க்கப்படாமல் இருந்திருந்தால், அரசமைப் பையே ஆளும் கட்சி மாற்றியிருக்கும் என்று திமுக தலைவா் ஆ.ராசா நேற்று குற்றஞ்சாட்டினார். அவரது பேச்சால் மக்கள வையில் சில நிமிஷங்கள் சலசலப்பு நிலவியது.

ஆ.ராசா
ஆ.ராசா பேசுகையில், ‘மிசா காலத்தில் ஜன நாயகம் மட்டுமே தாக் கப்பட்டது, ஆனால் பாஜக ஆட்சியில், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சட் டத்தின் ஆட்சி, சமத்துவம், கூட்டாட்சி, நீதித்துறை பாரபட்சமின்மை ஆகிய ஆறு கூறுகள் (கேசவானந்த பாரதி வழக்கில் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியவை) அனைத்தும் இல்லாமல் போய்விட்டன. தேசம்தான் எல்லாவற்றுக்கும் மேலா னது. அதனால்தான் நாங்கள் காங்கிரசுடன் அமா்ந்திருக்கிறோம்’ என்றார்.

மேலும், ‘மக்களவை தோ்தலுக்கு முன்னதாக உங்களுடைய கட்சியைச் சோ்ந்த தலைவா் ஒருவா் 400-க்கும் அதிகமான இடங்களை வென்றால் அரசமைப்பை மாற்றி ஹிந்து தேசமாக மாற்றுவோம் என ஊட கங்களிடம் பேசினார்’ என்றும் ஆ.ராசா கூறினார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *