சென்னை சென்ட்ரல் தொழில்நுட்பக் கல்லூரியில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு திறன் பயிற்சி மய்யம்

1 Min Read

சென்னை, டிச.15– சென்னை சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் செலவில் திறன் பயிற்சி மய்யம் அமைக்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

செவித்திறன் குறைந்த மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளி மாணவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு பல்வேறு திறன் பயிற்சி அளிப்பதற்காக சென்னை தரமணி சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியில் புதிய திறன் பயிற்சி மய்யம் அமைக்கப்படுகிறது. இதற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உயர்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த திறன் பயிற்சி மய்யத்தில் வயர்மேன் கன்ட்ரோல் பேனல் எலெக்ட்ரானிக்ஸ், வயரிங் ஹார்னெஸ் அசெம்ப்ளி ஆபரேட்டர் ஆகிய பாடப் பிரிவுகள் தொடங்கப்படும்.

8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 2 ஆண்டு கால தேசிய தரச் சான்றிதழ் பெற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளிகள் இப்பாடப் பிரிவுகளில் சேரலாம். ஒவ்வொரு பாடப் பிரிவிலும் தலா 30 பேர் சேர்க்கப்படுவர். படிப்பு காலம் 6 மாதங்கள். மாற்றுத்திறனாளி மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *