கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 15.12.2024

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

  • மக்களவையில் பிரதமர் மோடியின் பேச்சில் ஒன்றும் விஷயம் இல்லை, ‘போர் அடிச்சது’ பிரியங்கா கிண்டல்.
  • அரசமைப்பு சட்டத்தை வெறுத்து மனுஸ்மிருதியை விரும்பியவர் சாவர்க்கர். மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்.
    டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
  • நாடாளுமன்ற வளாகத்தில் கேரள எம்பிக்களுடன் பிரியங்கா ஆர்ப்பாட்டம்: வயநாட்டுக்கு சிறப்பு நிதி ஒதுக்க கோரிக்கை

தி இந்து:

  • அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் ஆர்எஸ்எஸ், இந்து மகாசபையின் பங்களிப்பு என்ன?: பாஜகவுக்கு ஆ.ராசா கேள்வி.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

  • மகாபாரதத்தின் துரோணாச்சாரியாரைப் போலவே, பா.ஜ.க அரசு இந்திய இளைஞர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் சமூகத்தின் பிற பிரிவுகளின் கட்டைவிரலை வெட்டுகிறது, ராகுல் கண்டனம்.
  • ஜனநாயகத்தை தேசிய ஜனநாயக கூட்டணி திட்டமிட்ட முறையில் சிதைத்தது: மஹுவா மொய்த்ரா குற்றச்சாட்டு.
  • ‘வெறுக்கத்தக்க பேச்சு’ என்ற குற்றச்சாட்டின் கீழ், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் டில்லிக்கு வர அழைப்பாணை.

தி டெலிகிராப்:

  • ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் இந்தியா, அதன் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது’: சி.பி.எம். தலைவர் தாரிகாமி கண்டனம்.

 

டைம்ஸ் ஆப் இந்தியா:

  • மதச்சார்பின்மைக்கு விரோதமான சக்திகள் ஒன்றிய ஆட்சியில் உள்ளன: மக்களவையில் ஆ.ராசா பேச்சு; பாஜக எதிர்ப்பு.
  • மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி வரையறை தென்னாட்டை பாதிக்கும், உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்கள் – தற்போதைய 169-லிருந்து 324 ஆகவும், தென் மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கருநாடகா – தற்போதைய 129-லிருந்து 164 ஆகவும் அதிகரிக்கும் என தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. லவு சிறீ கிருஷ்ண தேவராயலு, கவலை தெரிவித்தார்.

.– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *