ஈ.வெ.கி.ச.இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Viduthalai
1 Min Read

சென்னை, டிச. 15- இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் மறைவுற்ற ஈ.வெ.கி.ச.இளங்கோவன் இறுதி நிகழ்வுகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரனும், ஈ.வெ.கி.சம்பத் – சுலோசனா சம்பத் மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஈ.வெ.கி.ச.இளங்கோவன் 14.12.2024 அன்று இயற்கை எய்தினார்.

கடந்த 21.12.1948-இல் ஈரோட்டில் பிறந்த இவர், இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக 1996 முதல் 2002 வரை பணியாற்றினார். 2004-இல் நாடாளுமன்ற உறுப்பினராக கோபிச் செட்டிப்பாளையம் மக்கள வைத் தொகுதியிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட இவர், ஒன்றிய அரசில் ஜவுளித்துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்று சிறப்பான முறையில் பணியாற்றினார். தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் சிறப்பாக மக்கள் பணியாற்றினார். அரசியல், மக்கள் பணி, பொது வாழ்வு என அனைத்து தளங்களிலும் நீண்ட அனுபவம் கொண்டவர். தன் சிந்தனைக்குச் சரியாகப் பட்டதை துணிவுடன் வெளிப்படுத்தியவர். அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கும், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி மக்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது பொது வாழ்வைப் போற்றும் விதமாக அவரது உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும்.

இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *