நாதஸ்வர வித்வான் தோளில் துண்டு போடுவதற்கு இருந்த தடையை நீக்கிய பட்டுக்கோட்டை அழகிரி

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கானாடுகாத்தானில் ஒரு நாதஸ்வர வித்வானுக்கு ஏற்பட்ட அவமரியாதையை எடுத்துக் காட்டினார்.
தென்னிந்தியாவுக்கே முதன்மையான நாதஸ்வரர் வித்வான் மதுரை சிவக்கொழுந்து. அன்றைய காலத்திலேயே ஒரு நாளைக்கு ரூபாய் 500 வாங்கும் அளவிற்கு திறமை வாய்ந்த செல்வாக்கு வாய்ந்தவர். அவர் செட்டிநாட்டில் உள்ள கானாடுகாத்தானில் ஒரு செல்வந்தரின் வீட்டு திருமணத்தில் நாதஸ்வரம் வாசிக்க வந்திருந்த போது வியர்வையைத் துடைத்துக் கொள்ள ஒரு சிறிய துணியை தோளில் போட்டுக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தார்.

பட்டுக்கோட்டை அழகிரி
அப்போது அவரை பிரபுக்கள், “மேளக்காரன் துண்டை போட்டுக் கொண்டு வாசிக்கலாமா?” என்று கண்டித்து வாசிப்பதை தடுத்து தோளில் இருந்த துண்டை எடுக்கச் சொன்னார்கள். அங்கு சென்றிருந்த சுயமரியாதை இயக்கத்தின் முதன்மை பிரச்சாரகரான .தளபதி பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் வித்வான் சிவக்கொழுந்தை நோக்கி, “நீங்கள் தோளிலிருந்து துண்டை எடுக்கக் கூடாது. அப்படியே வாசியுங்கள் கேட்பவர்கள் கேட்கட்டும் கேட்காதவர்கள் போகட்டும். இல்லையென்றால் நீங்களாவது வாசிக்காமல் போய்விடுங்கள்” என்றார். பார்ப்பனர் அல்லாத வித்வான் துண்டு போடுவதற்கு இருந்த தடை அவர்களின் வைதீகத்தின் கோர முகத்தை காட்டுகிறது அல்லவா? இந்த நிலையில் அவரை அழைத்த செல்வந்தர் தன் வீட்டு திருமணத்தில் நாதஸ்வரம் வாசிப்பவர் பாதியிலேயே சென்றால் அவமானம் ஆகி விடுமே என்று கருதி சமாதானம் செய்து தோளில் துண்டோடு வாசிக்க ஏற்பாடு செய்தார். இது ஒரு ஊரில் நடைபெற்றது அல்ல. நாடு முழுவதும் இதுதான் நிலை. தென்னிந்தியாவிலேயே முதன்மையானவராக இருந்த அவருக்கே அந்த நிலை என்றால் கிராமங்களில் வாசிக்கும் தோழர்களின் நிலையை கேட்க வேண்டுமா?

– ஆதாரம்: புலவர் இமயவரம்பன் எழுதிய ‘தந்தை பெரியாரின் வாழ்க்கையிலே’ நூலிலிருந்து…

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *