வைக்கம் விழாவில் வழங்கப்பட்ட ‘முதல் வைக்கம் விருது’

Viduthalai
2 Min Read

வைக்கத்திலுள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள தெருக்களில் ஒடுக் கப்பட்டவர்கள் நடப்பதற்கு தடை விதிக்கப் பட்டிருந்ததை நீக்கக் கோரி நடந்த வைக்கம் போராட்டத்தில் கேரளத் தலைவர்களின் அழைப்பின் பேரில் தந்தைப் பெரியார் வைக்கம் சென்று, அந்தப் போராட்டத்துக்கு தலைமை ஏற்றார். பின்பு பல நாட்கள் அங்கு தங்கியிருந்து போராட்டத்தை ஒருங்கிணைத்து, அனைத்து மக்களிடமும் வைக்கம் போராட்டம் குறித்து தமது சீர்திருத்த, சமூக நீதிக் கருத்துக்கள் மூலம் பிரச்சாரம் செய்து, வைக்கம் போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் என்ற. தந்தை பெரியாரின் போராட்ட வரலாற்றை ஏடுகளில் படிக்கவும். தலைவர்களின் உரை வீச்சில் கேட்கவும் மட்டுமே முடிந்த இன்றைய தலைமுறைகள். வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை நேரில் கண்டு அன்றைய போராட்ட சூழலையை உணர்ந்து வியந்தனர்.

மனத்திரையில் கற்பனைக் காட்சி
நூறு ஆண்டுகளுக்கு முன்பு கோயில் நுழைவு போராட்டம் நடைபெற்ற அந்த இடங்களை பார்த்து படம் பிடித்து மகிழ்ந்த துடன். நம் முன்னோர்களுக்கு நடக்க உரிமை மறுக்கப்பட்ட வீதியா இது..? என்று வியந்தும். வீறுகொண்டும் அத்தெருவில் பலமுறை நடந்து, நடந்து அக்காலக் கொடுமையினை மனத்திரையில் கற்பனைக் காட்சியாக்கி பார்த்தனர்.
தந்தை பெரியார் அவர்களின் போராட்ட வெற்றியை நினைவு கூரும் விதமாக, அய்யாவுக்கு வைக்கத்தில் 1994-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சிலையும். நினைவகமும் பழைமையான நிலையில். தமிழ்நாடு ‘திராவிட மடல், முதலமைச்சர் மானமிகு. மு.க.ஸ்டாலின் அவர்களின். முன்முயற்சியுடன் ரூ.8.14 கோடியில் சீரமைப்பு பணி நடைபெற்று. பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக் கும் ஒளிப்படங்கள் அடங்கிய நிரந்தர கண் காட்சிக்கூடம், மிகவும் அழகிய நூலகம், பார்வையளர்கள் மாடம், சிறுவர் பூங்கா உள் ளிட்டவை அமைந்துள்ளன.
12.12. 2024 அன்று, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில். தந்தை பெரியார் அவர்களின் போராட்டத் தொடர்ச்சி யான, நம் கழகத் தலைவர். ஆசிரியர் கி.வீரமணி முன்னிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திறந்து வைத்து. ஆற்றிய எழுச்சியுரை என்பது. சமூகநீதி வரலாற்றின் வீரியமிக்கத் தொடர்ச்சி.

இரு மாநில அரசாங்கத்திற்கும் நன்றி பாராட்டும் முகமாக தமிழர் தலைவர் ஆசிரியர். தமிழிலும். மலையாளத்திலும். ஆங்கிலத்திலும் மிகச்சுருக்கமாக தந்தை பெரியாரின் கொள்கை சிகரம் தொட்ட பூரிப்புடன் முழங்கிய கருத்து ஒலிமுழக்கம். கருஞ்சட்டைத் தொண்டர்களுக்கு மாத்திரம் அல்ல, விழாவில் பங்கேற்றிருந்த ஆயிரமாயிரம் கேரளத்து மக்களுக்கும் புத்துணர்வை கொடுத்திருக்கும்.
‘கேரள முதலமைச்சர் இந்தியாவுக்கே எடுத்துக் காட்டான முதலமைச்சர்,’ என்று நமது முதலமைச்சர் மேடையில் எடுத்துச்சொன்னது போல, சமூகநீதிப் பதையிலும், சகோதரத்துவ வழியிலும் மக்களை இட்டுச் செல்லும் தனித்துவம் மிகுந்த முதலமைச்சர் என்பதனை அவர்களின்உரையிலிருந்தே உணரமுடிந்தது.

சொல்வதைச் செய்வதும். செய்வதை மட்டுமே சொல்வதும் என்பதை மீண்டும், மீண்டும் செயலில் காட்டிடும் நம் முதலமைச்சர். சென்ற ஆண்டு சட்டமன்றத்தில் அறிவித்தது போலவே, 2024-ஆம் ஆண்டிற்கான “வைக்கம் விருது” கருநாடக மாநிலம், மைசூரு மாவட்டத்தை சேர்ந்த புகழ் பெற்ற, சிறந்த எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலரான தேவநூர மஹாதேவாவுக்கு மேடையில் வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவிற்கு மிகப் பொருத் தமாக இருந்தது.
விழாவில் இரண்டு மாநிலத்து கருஞ்சட்டை தோழர்கள் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கூடி விழாவை கருங்கடலாக நிறைத்தி ருந்தது கண் கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

– செந்துறை மதியழகன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *