கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 14.12.2024

viduthalai
1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து அவையில் காரசார விவாதம். நான் விவசாயி மகன் என்பதால் தாக்குதல் என்ற தன்கர் பேச்சுக்கு, நான் தொழிலாளியின் மகன் என கார்கே பதிலடி.

* அரசியல் சட்டம் குறித்த விவாதத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளிடையே கடும் வாக்குவாதம்.

*ஒரே நாடு, ஒரே தேர்தல் எனும் ஜனநாயக விரோத திட்டத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அமைச்சரவை ஒப்புதல் அளித்து கொடுங்கோன்மைக்கு வழி வகுக்க நினைக்கிறது, முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்.

* நீதிபதி லோயா மரணம் குறித்து திரிணாமுல் எம்பி மொய்த்ரா பேச்சால் சர்ச்சை: நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் மிரட்டல்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

*வாக்கு இயந்திர குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு, ஏப்ரல் 2024ல் தீர்ப்பு அளித்த அதே நீதிபதிகள் அமர்வு முன்புதான் விசாரணை, உச்ச நீதிமன்றம் தெளிவு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதித்துறை சுதந்திரம் மற்றும் அரசமைப்பு நீதிமன்றங்களின் ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்து வதாக திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மகுவா மொய்த்ரா குற்றம் சாட்டினார். கணபதி திருவிழாவின் போது பிரதமர் மோடியை அவர் அழைத்ததற்கும் விமர்சனம்.

* டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வழங்க தடை விதித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மக்களவையின் முதல் உரையில் நேரு – காந்தி விமர்சனத்தை கையிலெடுத்த பிரியங்கா; நீங்கள் ஏன் எமர்ஜென்சியில் இருந்து கற்றுக்கொள்ளவில்லை? என பா.ஜ.க.,வுக்கு கேள்வி.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *