அரங்க கூட்டங்கள் நடத்தப்படும்: மதுரை, மதுரை புறநகர் மாவட்டங்களின் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்

viduthalai
2 Min Read

மதுரை, டிச. 14- மதுரை, மதுரை புறநகர் மாவட்டங்களின் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 8.12.2024 அன்று மாலை 5.30 அளவில் மதுரை கீழமாசி வீதியில் அமைந்திருக்கும பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பா.சடகோபன் உரையாற்றினார். கலந்துரையாடல் கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழகத்தினு டைய மாநில அமைப்பாளர் பேராசிரியர் டாக்டர் சி. மகேந்திரன் தலைமை தாங்கி உரையாற்றினார்.

கலந்துரையாடல்

மதுரை மாவட்டத்திற்கு வந்திருக் கும் அண்ணன் வி. மோகன் மிகுந்த பாராட்டுக்குரியவர். அவரை வரவேற்கி றோம் என்று சொல்லி அவருக்குப் பொன்னாடை போர்த்தி வரவேற்று, திருச்சியில் நடைபெற இருக்கும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாடு பற்றியும் தான் கலந்து கொண்ட பல நாத்திக மாநாடுகள் பற்றியும் குறிப்பிட்டு தொடக்க உரை யினை முனைவர் வா.நேரு நிகழ்த்தினார்.

அடுத்து கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கம் பற்றிய சிறப்புரையினை பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச் செயலாளர் வி..மோகன் நிகழ்த்தினார். தொடர்ந்து திராவிடர் கழகத்தின் தலைமைக் கழக அமைப்பாளர் மதுரை வே.செல்வம் அவர்கள் கருத்துரையாற்றினார்.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச்செயலாளர் பாவலர் சுப.முரு கானந்தம்,கடந்த பல ஆண்டுகளாகப் பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப் பாளராக இருந்து பணியாற்றி இருக் கிறேன் என்று குறிப்பிட்டு தன் அனுப வங்களைப் பகிர்ந்துகொண்டு கருத்துரை தெரிவித்தார்.

தொடர்ந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் பால்ராஜ், திராவிடர் கழகத்தினுடைய மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம் தலைமைக் கழகப் பேச்சாளர் அ.வேல் முருகன், எழுத்தாளர் சொ.நே.அன்பு மணி, மந்திரமா தந்திரமா புகழ் பேரா.சுப.பெரியார்புத்தன்,மதுரை மாவட்டச்செயலாளர் இரா.லீ.சுரேசு, ஆட்டோ சி. செல்வம், மாணவர் கழக தேவராஜ் பாண்டியன், புற நகர் மாவட்ட செயலாளர் பா. முத்துக் கருப்பன், புறநகர் வீர்ராகவன் தங்கத்துரை, வீர.பழனிவேல்ராசன், ச.அழகுமீனாள்,வண்டியூர் கா.கிருஷ்ண மூர்த்தி, பெரி.காளியப்பன், இராக்குதங்கம், ச.வேல்துரை, சு.கண்ணன், தனுஷ்கோடி, முரளிதரன், கா.பண்டியன் உள்ளிட்ட பலரும் தங்கள் கருத்துக்களை எடுத்து வைத்தனர் நிறைவாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மதுரை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக முதல் தவணை நிதியாக ரூபாய் 15 ஆயிரத்தினை மாநில அமைப்பாளர் சி.மகேந்திரன் அவர்கள் வழங்கினார். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பாக முதல் தவணையாக ரூபாய் 25 ஆயிரத்தை எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்தலைவர் வா.நேரு மற்றும் மாநிலச்செயலாளர் சுப.முருகானந்தம் வழங்கினர்.

மதுரை மாநகர்,புறநகர் மாவட்டங் களில் பகுத்தறிவாளர் கழக அமைப்பு களைக் கட்டுவது-அதற்கான பொறுப்பாளர்களை நியமித்து தொடர்ச்சியாக செயல்படுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
மதுரை பெரியார் மய்யத்தில் மாதந் தோறும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக அரங்கக் கூட்டங்களை நடத்து வது என்று தீர்மானிக்கப்படுகிறது..

மதுரை, மதுரை புறநகர் சார்பாக பெருந்திரளாக திருச்சியில், டிசம்பர் 28, 29 தேதிகளில் நடைபெறும் அகில இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவராக மா.பால்ராசு அவர்களும், செயலாளராக வீர.பழனி வேல்ராசன் அவர்களும், மதுரை புறநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளராக வீர்ராகவன் தங்கத்துரை அவர்களும் பொதுச்செயலாளர் வி.மோகன் அவர்களால் அறிவிக்கப்பட் டனர்.

நிறைவாக மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச்செயலாளர் வீர.பழனிவேல்ராசன் அவர்கள் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *