காவல்துறை கவனிக்குமா?

Viduthalai
1 Min Read

அரசியல்

‘தினமலர்’ வாரமலரில் அந்துமணி பதில்களில் (23.7.2023, பக்கம் 10) கீழ்க்கண்ட கேள்வி- பதில் இடம்பெற்றுள்ளது.

கேள்வி: ‘லஞ்சம் வாங்கும் ஒரு சில கறுப்பு ஆடுகளால் மொத்த காவல்துறையினரையும் களங்கப்படுத்தக் கூடாது…’ என, அவர்கள் கூறுகின்றனர்…  இது என்ன நியாயம்?

பதில்: நியாயமே இல்லை; அத்துறையில் லஞ்சம் வாங்காதவர்களே இல்லை. ‘காவல் நிலையம்’ என்ற போர்டுக்குப் பதில் ‘லஞ்ச நிலையம்’ என போர்டு வைத்தால் பொருத்தமாக இருக்கும்!

‘தினமலரின்’ இந்த பதிலின்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

எடுக்காவிட்டால், ‘தினமலர்’ வார மலர் எழுதியது உண்மைதான் என்ற நிலையை பொதுமக்கள் நம்பும்படி ஆகாதா? காவல் துறை என்ன செய்கிறது என்று பார்ப்போம்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *