இந்திக்குப் பரிவட்டம்  ஏன்கட்ட வேண்டும்?

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பாக்குளித்த தமிழிருக்கப் பசையற்ற இந்திமொழி
பந்திக்கு வருவதென்ன சரியார் முன்
தீக்குளித்த தமிழர் திசைவணங்கி மீண்டுமொரு
தீமுட்டத் தானிந்தச் சதியா?
நாடெல்லாம் இந்திமொழி நடமாட வேண்டுமெனில்
நமதொருமைப் பாடென்ன கனவா? – தமிழ்
நாடென்ன அடிவருடி நயத்தக்க மொழிபேசி
நஞ்சருந்தி விடுமென்ற நினைவா?
இடைவேளை விட்டுவிட்டு இடையசைத்து வருவதிந்த
இந்திமக ளுக்குஒரு கேடா? – தமிழ்ப்
படையென்றும் இந்திக்குப் பகையென்று தெரியாதா
பாம்புக்குப் புற்றெங்கள் விடா?
‘அஞ்சலிலும் எல்ஜசி ஆகாஷ வாணி’யிலும்
ஆதிக்கம் செய்வதென்ன முறையா? – எமை
வஞ்சிக்கப் பலதிட்டம் வகுத்தாலும் வேலைக்கு
வாய்ப்பென்று சொல்வதொரு கலையா?
‘எழுதுகோல் ஆண்பாலாம் எழுதுமதாள் பெண்பாலாம்’
இதைச்சொல்லும் இந்தியொரு மொழியா? – அதை
வழிமொழிய வேண்டுமென வருகின்ற கட்டளைகள்
வரலாற்றுப் போருக்கு வழியா?
கடவுளுக்கு வடமொழியும் கல்விக்கே ஆங்கிலமும்
அரசியலுக கிநதியுமே கதியா? – வாழும்
தடமெங்கும் நந்தவனம் தான்படைக்கும் தமிழர்க்குத்
தன்மொழியைப் போற்றிடவும் தடையா?
வந்திக்க வேண்டுமென வலைகொண்டு வருமொழியை
வரவேற்று வணங்கி எம் தலையார் – சீ
இந்திக்குப் பரிவட்டம் ஏன்கூட்ட வேண்டுமென
எழுகின்ற குரல்கேட்க விலையார்
தொண்ணூறு வருடங்கள் தொடர்ந்துவரும் சூழ்ச்சிகளில்
தோற்றபின்னும் இந்த நிலையா? – அட…
கண்ணாகத் தமிழ்நாட்டைக் காக்கின்ற தளபதிமுன்
காவிகளும் உதிர்ந்துவிடும் ‘இலையா!’
உயிர்கொண்டு மொழிகாத்த ஓங்குபுகழ் தமிழ்நாட்டில்
ஒட்டுண்ணி மொழிக்கென்ன வேலை? – எங்கள்
உயிருள்ள வரையிங்கே உலவாது வடஇந்தி!
உணரட்டும் வடவர்களின் முளை!
இந்தியா ஒன்றுதான்; எமதினிய நாடுதான்!
‘இந்தி’யா அதைமாற்ற வேண்டும்? – வட
இந்தியா இதைமட்டும் சிந்தியா திருக்குமெனில்
எப்போதும் நினைவூட்ட வேண்டும்!
– கவிஞர் கங்கைமணிமாறன், மயிலாடுதுறை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *