மழை பாதிப்பு பகுதியில் துரிதகதியில் மீட்புப் பணி சென்னை காவல்துறை சார்பில் 39 கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு

Viduthalai
1 Min Read

சென்னை, டிச.13 சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் துரி கதியில் மீட்புப் பணி நடைபெற்று வரு கிறது. காவல்துறை சார்பில் 39 மினி கட் டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறை
சென்னையில் அவ்வப்போது பெய்து வரும் கன மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.
மாநகராட்சி அதிகாரிகளும் மீட்புப் பணி நடவடிக்கைகளை முடுக்கி விட் டுள்ளனர். சென்னை காவல்துறை யினரும் காவல் ஆணையர் அருண் உத்தரவின்படி மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு வசதியாக சென்னையில் 39 இடங்களில் காவல் மினி கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப் பட்டுள்ளன.

அந்த இடங்கள் வருமாறு: வேப்பேரி (7824867234), சேத்துப்பட்டு (9384039045), அயனாவரம் (9498100052), அண்ணா சதுக்கம் (9498100024), நுங்கம்பாக்கம் (9498100042), எழும்பூர் (9498213703), ராயப்பேட்டை (9498118840), மயிலாப்பூர் (9498100041), கோட்டூர்புரம் (944444664), சாஸ்திரி நகர் (8939003299), வேளச்சேரி (9498122707), சைதாப்பேட்டை (9445967402), நீலாங்கரை (9498100174), துரைப்பாக்கம் (9962343724), பரங்கிமலை (9865166803), நந்தம்பாக்கம் (9080290477), பழவந்ததாங்கல் (8220295183), மடிப்பாக்கம் (8122426105), ஆதம்பாக்கம் (9629333366), மாம்பலம் (9498131375), கலைஞர் கருணாநிதி நகர் (9498100191), எம்ஜிஆர் நகர் (9498100188), எஸ்பிளனேடு (9498199817), பூக்கடை (8122360906), வடக்கு கடற்கரை (9498100218), வண்ணை நகர் (9498100224), ராயபுரம் (9498100232), புளியந்தோப்பு (8148239521), எம்கேபி நகர் (7548899151), பெரவள்ளூர் (9940191499).
மேலும், பொதுமக்கள் காவல் துறையை அழைக்கும் வகையில் தனித்தனி அலைபேசி எண்களையும் கொடுத்துள்ளனர். மேலும், அவசர தேவைக்கு காவல் கட்டுப்பாட்டு அவசர அழைப்பு எண்ணான 100-அய் தொடர்பு கொள்ளலாம் என சென்னை காவல்துறை ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *