கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

13.12.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதலை ஒன்றிய அமைச்சரவை வழங்கியது; அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கலாக வாய்ப்பு
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்து சுதந்திரத்தை மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் தொடர்ந்து நசுக்குவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு.
* எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, கூறியதையடுத்து, அமைச்சருக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சகரிகோ கோஸ் சிறப்புரிமை தீர்மானம் தாக்கீது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மகாராட்டிராவில் மஹாயுதி அரசாங்கத்தின் அமைச்சரவை விரிவாக்கத்தில் சிக்கல்; ஏக் நாத் ஷிண்டே டில்லி பயணம் ரத்து. சமாதானப்படுத்த பாஜகவின் பவான்குலே சந்திப்பு.
* “அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான மற்றும் கூட்டாட்சிக்கு எதிரான ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மூலம் தங்கள் வழியை புல்டோசர் ஆட்சி செய்துவிட்டது” என மம்தா கண்டனம்.
தி இந்து:
* 2020 ஹத்ராஸ் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்த ராகுல், நீதிக்காக போராடுவதாக உறுதி
*மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மாணவர்களுக்கு அவர்களின் வளாகங்களில் சமத்துவம், சகோதரத் துவம் மற்றும் மதச்சார்பின்மை போன்ற முக்கிய அரசமைப்பு கொள்கைகளை புகுத்துவதன் மூலம் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதை உறுதி செய்வதில் உத்தரப்பிரதேச அரசின் “மவுனம்” குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
* ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம், தனியார் வேலைகளில் உள்ளூர் மக்களுக்கு 75 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு தடை விதித்தது.
தி டெலிகிராப்:
* மசூதி தொடர்பான வழக்குகள் புதிய மனுக்களை விசாரிக்க கூடாது: கீழமை நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி தடை.

.– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *