கழகக் களத்தில்…!

1 Min Read

14.12.2024 சனிக்கிழமை
கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
கன்னியாகுமரி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் * பொருள்: பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் கூட்டமைப்பு 13ஆவது மாநாடு (டிசம்பர் 28 & 28) * தலைமை:
உ. சிவதாணு பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் * முன்னிலை: மா.மு. சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்), கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: வா. தமிழ்ப்பிரபாகரன் மாநில பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம் * கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் பெரியார் பற்றாளர்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என அன்புடன் அழைக்கிறோம்.

15.12.2024 ஞாயிற்றுக்கிழமை
ஆவடி மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி: மாலை 5 மணி * இடம்: ஆவடி பெரியார் மாளிகை * தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்) * பொருள்: டிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாள், டிசம்பர் 28 & 29 திருச்சி அகில இந்திய பகுத்தறிவாளர் கழக மாநாடு, விடுதலை சந்தா * விழைவு: ஆவடி மாவட்ட திராவிடர் கழக அனைத்து அணி தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் * அழைப்பு: க.இளவரசன் (மாவட்ட செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *