மலேசிய திராவிடர் கழகம் ஜொகூர் மாநிலம் சின்னப்பன் காலமானார்

1 Min Read

அரசியல்

மலேசிய திராவிடர் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஜொகூர் மாநிலம், கங்கார் பூலாய் கிளையின் மேனாள் தலைவருமான மானமிகு சின்னப்பன் அவர்கள் 21.7.2023 அன்று மறைந்த துயரச் செய்தி கேட்டு வருத்தமடைகிறோம். மறைந்த சின்னப்பன் அவர்கள் ஜொகூர் மாநிலத்தில் மலேசிய திரா விடர் கழக செயல்பாடுகள் வலுப்பட – திறம்பட பாடுபட்டவர். அறிஞர் அண்ணா நடமாடும் நூலகத்தின் பொறுப்பாளராகவும் சின்னப்பன் அவர்கள் செயல்பட்டவர். அவரது வாழ்விணையர் மானமிகு லட்சுமி அவர்களும் மாநில கழக மகளிரணிப் பொறுப்பாளராக இருந்து செம்மையாகப் பணியாற்றியவர் ஆவார். 

மறைந்த சின்னப்பன் அவர்களின் குடும்பத்தாருக்கும், மலேசிய திராவிடர் கழகத் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங் கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர், 

திராவிடர் கழகம் 

முகாம்:

மலேசியா – கோலாலம்பூர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *