ஆத்திகர் என்றால் நம்பிக்கைக்காரர்கள் சொந்த அறிவின்படி எதையும் ஆராயாமலும், நடக்காமலும் வெகு நாள்களாக நடந்து வருவதை அப்படியே ஒப்புக் கொள்ளுபவர்கள். ஆத்திகர் என்றால் முன்னோர்கள் கருத்துக்கு மாறாகத் தன் அறிவு கொண்டு ஆராய்வதை சில விசயங்களில் பாவம் என்று எண்ணுகின்றார்கள்; மூடநம்பிக்கைக்காரர்கள்; முன்னோர்கள் சொன்னதை அப்படியே நம்பி நடக்காவிட்டால் கேடு வரும் என்று பயந்து நடப்பவர்கள்; ஆராய்ச்சி அறிவை விட நம்பிக்கையையே பிரதானமாகக் கொண்டு நடப்பவர்கள். ஒன்றுக்கும் உதவாத இத்தன்மைகளையுடைய ஆத்திகத்தால், ஆத்திகர்களால் சமுதாயத்துக்கு உண்டாகும் நன்மைகள் தான் என்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’