திருவாரூர் சி.தங்கராசு மறைவு

1 Min Read

திராவிடர் கழக மேனாள் திருவாரூர் ஒன்றிய செயலாளரும், சூரனூர் காலம் சென்ற சின்னையனின் மகனும், த.அம்பேத்கரின் தந்தையுமான சி.தங்கராசு 7.12.2024 அன்று இரவு 7.45 மணியளவில் இயற்கை எய்தினார், அவர்களுக்கு 8.12.2024 காலை 10 மணி அளவில் திருவாரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் தலைமை கழக அமைப்பாளர் வீ.மோகன், மாவட்ட விவசாய செயலாளர் க. வீரையன், திருவாரூர் ஒன்றிய தலைவர் கா.கவுதமன், மாவட்ட மகளிரணி தலைவர் இரா.மகேஸ்வரி, ஒன்றிய துணை தலைவர், கு.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் கோ.கண்ணதாசன், ஒன்றிய துணை செயலாளர் ஜெ.கனகராஜ், சூரனூர் கு.மணிவண்ணன், கு.மனோகரன் ஆகியோர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். மற்றும் ஏராளமான கிராம மக்கள் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி மாநில மேனாள் முதலமைச்சர் டி.ராமச்சந்திரன் மறைவு:

கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை புதுச்சேரி மாநில மேனாள் முதலமைச்சர் டி.ராமச்சந்திரன் அவர்களின் உடலுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் மாநிலத் தலைவர் சிவ.வீரமணி தலைமையில் வீரவணக்கம் செலுத்தி மலர் மாலை வைத்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *