வைக்கம் விழாக்கள்: கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

0 Min Read

12.12.2024 அன்று கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெறவிருக்கும், தந்தை பெரியார் பங்கேற்று வெற்றி பெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழா – தந்தை பெரியார் நினைவகம் மற்றும் பெரியார் நூலகம் திறப்பு விழா ஆகிய விழாக்களில் பங்கேற்க வரும் கழகக் கொள்கைக் குடும்பத்தினர், அங்கே மிகவும் கட்டுப்பாடு காத்து, விழா தொடங்குமுன் உரிய நேரத்தில் அமர்ந்து, விழா முடிந்து, முக்கியஸ்தர்கள், ஏற்பாட்டாளர்கள் வெளியேறுவதற்கு நன்கு ஒத்துழைப்புத் தந்து, சிறப்புடன் விழா மாட்சிக்குக் காரணியாக இருக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பயணத்திலும் கட்டுப்பாடு காத்திடவும், உடல்நலம் பேணவும் வேண்டுகிறோம்!

– தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *