ஆரம்ப சுகாதார நிலையங்களில் காசநோய் மருத்துவ மய்யம்

2 Min Read

சென்னை,ஜூலை23 – ஊரகப் பகுதி மக்களின் நலனுக்காக 424 ஆரம்ப சுகாதார நிலையங்களில் காசநோய் சிறப்பு மருத்துவ மய்யம் விரைவில் தொடங்கப்பட உள் ளது. இதற்கான நடவடிக்கைகளை மாநில பொது சுகாதாரத் துறை முன்னெடுத்து வருகிறது.

காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சி களை மேற்கொண்டு வருகின்றன. எதிர்வரும் 2025-க்குள் அந்த நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழ் நாடு முழுவதும் காச நோயாளி களுக்கு தேவைப்படும் மருந்துகள் களப்பணியாளர்கள் மூலம் அவர் களின் இருப்பிடங்களுக்கே சென்று  வழங்கப்பட்டு வருகின்றன. சிகிச்சை நெறிமுறைகளின்படி அவர்களது வீட் டிலேயே சளி மாதிரி எடுக்கப்பட்டும், தேவைப்படுபவர்களுக்கு நடமா டும் ஊடுகதிர் கருவிகளை அவர் களின் இருப்பிடங்களுக்கே அனுப்பி ஊடுகதிர் படம் எடுக்கப்பட்டும் வருகிறது.

இதனால் அந்த நோயின் தாக் கத்தால் பாதிக்கப்படும் நோயாளி களில் 84 சதவீதம் பேரை முதல் சிகிச்சையிலேயே குணப்படுத்துவ தாகவும், தொடர் சிகிச்சைகள் மூலம் மீதமுள்ளவர்களையும் பூரண குணமாக்குவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை ஆண்டுதோறும் காச நோயால் 70,000 பேர் வரை பாதிக் கப்படுகின்றனர். அதைக் கருத்தில் கொண்டு கிராமப்புறங்களில் உள்ள காசநோயாளிகளைக் கண் டறிந்து சிகிச்சை அளிக்கும் வகை யில், 424 ஆரம்ப சுகாதார நிலை யங்களில் அதற்கான சிறப்பு மய்யம் விரைவில் தொடங்கப்பட உள் ளது.

இது குறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழ்நாட்டில் செயல்படுத்தப் பட்டு வரும் காசநோய் தடுப்பு திட் டத்தின் அடுத்தகட்ட நடவடிக் கையாக கிராமப்புற மக்களுக்கு தொடக்க நிலையிலேயே காச நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில், ஆரம்ப சுகா தார நிலையங்களில் சிறப்பு பரிசோ தனை மய்யம் தொடங்கப்பட உள் ளது. அந்த மய்யங்களில் காசநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர் களுக்கு உரிய சிகிச்சை வழங்குவ துடன் மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகை அளிக்கப்படும். அதேபோல், பாதிக்கப்பட்டவர் களின் வீடுகளுக்கு அருகே வசிப் பவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படும்.

இதன் வாயிலாக, காசநோயை கட்டுப்படுத்தி முழுமையாக ஒழிக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *