கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்தார்
கிருட்டினகிரி, டிச.10- கிருட்டினகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் பாண்டவர் குட்டை அருகேயுள்ள கருங்காலிப்பட்டியில் மத்தூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தலைமையாசிரியர் பொன்.சிவக்குமார் புதியதாக கட்டப்பட்டுள்ள சிவா – சங்கீதா இல்ல அறிமுக விழா நிகழ்ச்சி 5.12.2024 அன்று காலை 11.30 மணியளவில் நடைபெற்றது.
இல்ல அறிமுக விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் ஒன்றிய ப.க.தலைவர் தலைமையாசிரியர் பொன்.சிவக்குமார் வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலைமை வகித்துப் பேசினார்.
மாவட்ட கழகச் செயலாளர் செ.பொன்முடி, மத்தூர் ஒன்றியத் தலைவர் கி.முருகேசன், மாவட்ட மகளிரணி தலைவர் மு. இந்திராகாந்தி, அரூர் மாவட்ட ப.க. தலைவர் சா.இராசேந்திரன், தொழிலாளரணி அ. இராதாகிருட்டினன், மாவட்ட ப.க.செயலாளர் க. வெங்கடேசன், ஒன்றிய ப.க. நிர்வாகி சே.ஜானகிராமன், ஒன்றிய கழக நிர்வாகிகள் வி.திருமாறன், சா.தனஞ்செயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன் தொடக்கவுரையாற்றினார்.
வாழ்த்துரை
தலைமைக் கழக அமைப்பாளர் தருமபுரி ஊமை.செயராமன், திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன், சேலம் மாவட்டத் தலைவர் இரா.வீரமணி ராஜி, மத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் பொன்.குணவசந்தரசு, மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி, மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, அரூர் மாவட்ட ப.க.தலைவர் சா.இராசேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
புதிய இல்லத்தினை திறந்துவைத்து பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் சிறப்புரையாற்றினார்.
கழகப் பொதுச்செயலாளர் உரை
புதிய இல்லத்தினை திறந்து வைத்து கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பேசியதாவது:
தோழர் சிவக்குமார் மிக எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் கழக அமைப்பில் மாணவர் பருவந்தொட்டு இணைந்து பெரியார் கொள்கையை ஏற்று சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றவர், தற்பொழுது ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவராகவும் நாணயம், ஒழுக்கம், கட்டுப்பாடு மிக்க தோழராகவும், அண்ணா சரவணன் அவரிடம் டியூசன் பயின்றும் பல்வேறு சிரமங்களுக்கும் இடையில் பள்ளி படிப்பு, பட்டய படிப்பு பயன்று முடித்து இன்று தலைமை ஆசிரியராக வாழ்வில் உயர்ந்து கட்டுப்பாடு மிக்கவராக திகழ்ந்துவருபவர் சிவக்குமார். பெரியார் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள் என்பதற்கு சான்று தோழர் சிவக்குமார், சிவக்குமார் போன்ற எண்ணற்ற தோழர்கள் ஊற்றங்கரை, மத்தூர் பகுதியில் பழ.வெங்கடாசலம் மூலம் இயக்கத்திற்கு ஈர்க்கப்பட்டவர்கள் ஏராளம், மேலும் அந்த தோழர்களை எல்லாம் அண்ணா. சரவணன் அவர்களின் செயல்பாட்டால் உறுதிமிக்க தோழர்களாக இப்பகுதி தோழர்கள் இருந்து வருகின்றனர். இந்த இரண்டு பேருக்கும் கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அழகான இல்லத்தினை கட்டி திறப்பு விழாவை கொள்கை பிரச்சார எழுச்சி விழாவாக சிறப்பாக நடத்திய சிவக்குமார் – சங்கீதாவுக்கு வாழ்த்துகளையும் பராட்டு களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அண்ணா.சரவணன், தன்னுடைய சொந்த ஊர் நடுப்பட்டு கிராமத்தில் சாலை மார்கத்தில் சொந்த பயன்பாட்டிற்காக வீடு கட்ட வாங்கிய 900-சதுர அடிக்கும் மேற்பட்ட இடத்தில் தந்தை பெரியார் படிப்பகம் நூலகம் கட்ட ஆசிரியர் அவர்களிடம் அந்த இடத்திற்கான பத்திரத்தை அண்ணா.சரவணன் வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த இடத்தில் பெரியார் படிப்பகம்-நூலகம் தனது சொந்த பொறுப்பில் கட்டிக்கொடுப்பதாக திருப்பத்தூர் மாவட்ட கழகத் தலைவர் கே.சி.எழிலரசன் பேசியபோது தெரிவித்துள்ளார். நான் இங்கு வந்தது எனக்கு மிகப் பெரிய இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்பதை எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார்.
பெரியார் உலகம் நிதி
திருச்சி சிறுகனூர் பெரியார் உலகம் நிதியாக அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சா.இராசேந்திரன் ரூ.5000/-ம், தலைமைக் கழக அமைப்பாளர் தருமபுரி ஊமை.செயராமன்-தமிழ்ச்செல்வி
ரூ.1000/-ம், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் காவேரிப்பட்டணம் வெ.புகழேந்தி ரூ.500/-ம், ஓசூர் கழக மாவட்டச் செயலாளர் மா.சின்னசாமி ரூ. 500/-ம், கிருட்டினகிரி மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன் ரூ. 200/-ம் ஆகியோர் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் இல்ல அறிமுக விழாவில் பெரியார் உலகம் நிதியாக மொதம் ரூ. 7200/- மட்டும் வழங்கினார்கள். சிவக்குமார் – சங்கீதா வாழ்விணையர்களுக்கு சால்வை அணிவித்துப் பாராட்டினார்.
நடுப்பட்டு சாலையில் பொதுச்செயலாளருக்கு வரவேற்பு
நடுப்பட்டு சாலையிலிருந்து கருங்காலிப்பட்டி வரை கழக கொடிகள் கட்டி சிறப்பான வகையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு மாவட்ட கழகம் சார்பில் கிருட்டினகிரி மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் எழுச்சி மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
கருங்காலிப்பட்டியில் கழகக் கொடி
இல்லத்திறப்பு விழாவிற்கு முன்பாக கருங்காலிப்பட்டியில் திராவிடர் கழ கத்தின் சார்பாக சே.ஜானகிராமன், சே.இராமஜெயம் மற்றும் இவரது தந்தை சேட்டு தாய் அஞ்சலா ஆகிய இவர்களது முயற்சியில் உருவாக்கப்பட்டு இருந்த கழகக் கொடி கம்பத்தில் இனமான திராவிடர் கழக இலட்சிய கொடியை கழகப்பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஏற்றிவைத்தார்.
கொடிகம்பம் அமைக்கும் பணிகளை மேற்கொண்ட தோழர்களுக்கு கழகப் பொதுச்செயலாளர் சால்வை அணிவித்து பாராட்டினார்.
மாவட்ட கழகத் துணைத் தலைவர் வ.ஆறுமுகம் நிகழ்ச்சியை தொகுத்து இணைப்புரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தலைமைக் கழக அமைப்பா ளர் ஆத்தூர் சுரேசு, ஓசூர் மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, அரூர் மாவட்டத் தலைவர் அ.தமிழ்செல்வன். தருமபுரி மாவட்டச் செயலாளர் பீம.தமிழ் பிரபாகரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் தருமபுரி மா.செல்லதுரை, திருப்பத்தூர் கே.சி.எ.சிற்றரசு, கிருட்டினகிரி மாவட்ட கழக துணைச் செயலாளர் சி.சீனிவாசன், மாவட்ட ப.க.செயலாளர் க.வெங்கடேசன், தருமபுரி மாவட்ட ப.க.செயலாளர் இர.கிருட்டினமூர்த்தி, தொழிலாளரணி மாவட்டத் தலைவர் சி.வெங்கடாசலம், செயலாளர் சின்ராஜ், விவசாய அணி மாவட்ட தலைவர் இல. ஆறுமுகம், இளைஞரணி மாவட்டச் செயலாளர் நா. சிலம்பரசன், துணைத் தலைவர் வெ.புகழேந்தி துணைச்செயலாளர் பூ. இராசேந்திரபாபு, பகுத்தறிவாளர் கழக நிர்வாகிகள் ஆசிரியர்கள் இராம.சகாதேவன், இரா.பழனி, மா.திராவிடராசன், ஜெ. காயத்ரி, ச.முனிராஜி மகளிரணி முரு கம்மாள், காவேரிப்பட்டணம் ஒன்றிய கழகத் தலைவர் பெ.செல்வம், ஒன்றிய செயலாளர் பெ.செல்வேந்திரன், மு.சிலம்பர சன், கா.ஞானசேகரன், அ.சாமிநாதன், காவேரிப்பட்டணம் பரத், இளங்கோ உள்பட கிருட்டினகிரி, ஓசூர், தருமபுரி, திருப்பத்தூர், அரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களின் பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கிருட்டினகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் நடுப்பட்டு கிராமத்தில் அண்ணா.சரவணன் பெரியார் படிப்பகம் கட்ட பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளைக்கு 900 சதுர அடிக்கு மேற்பட்ட இடத்தின் பத்திரத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கியுள்ளார்.
நிறைவாக ச.சங்கீதா சிவக்குமார் நன்றி கூறினார்.
பெரியார் படிப்பகம் –நூலகம்
நடுப்பட்டு கிராமத்தில், திருப்பத்தூர் மாவட்ட கழகத் தலைவர் தனது சொந்த பொறுப்பில் பெரியார் படிப்பகம் நூலகம் கட்டிக்கொடுப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து அந்த இடத்தினை 5.12.2024 அன்று கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பார்வையிட்டார். அப்பொழுது உடன் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. செயராமன், திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன், மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, மாநில ப.க. துணைப் பொதுச்செயலாளர் அண்ணா.சரவணன், மாவட்ட துணைத் தலைவர் வ.ஆறுமுகம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் மா.செல்லதுரை, கே.சி.எ.சிற்றரசு, மாவட்ட விவசாயணி தலைவர் இல. ஆறுமுகம், ஒன்றியத் தலைவர் கி.முருகேசன், தருமபுரி கிருட்டினமூர்த்தி, பாபு, இராசேந்திரன் உள்ளிட்ட தோழர்கள் உடனிருந்தனர்.