பிளஸ்2 துணைத் தேர்வு முடிவு நாளை வெளியீடு

1 Min Read

அரசியல்

சென்னை, ஜூலை 23 – தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான துணைத் தேர்வு சமீபத்தில் நடந்தது. இந்த தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை 24ஆம் தேதி வெளியிடுகிறது. மாணவ, மாணவியர் தங்கள் தேர்வு எண், பிறந்த தேதி ஆகியவற்றை  https.//voters.eci.gov.in/ என்ற இணையத்தில் பதிவு செய்து மதிப்பெண் பட்டியலுடன் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல், மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந் தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 27 மற்றும் 28ஆம் தேதி களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். 

விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.275, மறு கூட்டல் செய்ய உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *