கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

23.7.2023

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

👉கலைஞர் பெண்ணுரிமை நலத்திட்டத்திற்கு தகுதி படைத்த அனைத்து பெண்களுக்கும் ஒருவர் கூட விடாமல், ரூ.1000 அளிக்கப்பட வேண்டும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.

 இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉தாழ்த்தப்பட்டவர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்பது தவறு. கருநாடகா, வங்காளத்தை பாஜக இழந்தது. பாஜகவும் தலித்துகளும் நெருப்பும் பனியும், நெருக்கமாக இருக்க முடியாது’ என பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் பேட்டி.

👉மணிப்பூரில் பெண்கள் மீதான தாக்குதலின் காட்சிப்பதிவு  நம் ஆழ்மனதை  உலுக்குகிறது. ஆனால்  நமது எதிர்வினைகள், பிரதமர் உட்பட மணிப்பூர் அட்டூழியத்திற்கு உரிய விதத்தில் இல்லை என்கிறார் சிறப்பாசிரியர் பிரதாப் பானு மேத்தா.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉மேற்கு வங்க மேனாள் முதலமைச்சர் ஜோதிபாசு விற்குப் பிறகு, நீண்ட நாட்கள், 23 ஆண்டுகள் 138 நாட்கள்,  மாநில முதலமைச்சராக ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சர் நவீன் பட்நாயக் சாதனை படைத்துள்ளார்.

தி டெலிகிராப்:

👉மணிப்பூர் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேச வேண்டும் என்று ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வலியுறுத்தியுள்ளார்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *