சீர்மிகு சிவகங்கை வரலாற்றில் ஒரு அடையாளமாகத் திகழும், சுயமரியாதை சுடரொளி மானமிகு. சிவகங்கை இராமச்சந்திரனார் நினைவுப் பூங்கா, சமூக நீதியின் சரித்திர நாயகர் மானமிகு. மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்க ளின் நல் ஆலோசனை யில், சீரமைக்கப்பட்டு, புதிய பொலிவுடன், ஏற்ற மிகு எழுச்சியுடன் நேற்று (22.07.2023) திறப்பு விழா நடை பெற்றது. திராவிட இயக்க உணர்வாளர்கள், சிவகங்கை மண்ணின் மைந்தர்கள் ஆகியோரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய மாண்புமிகு. கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய நகர் மன்ற தலைவர் சி..வி. துரை ஆனந்த் அவர்களுக்கும், நகர் மன்ற துணைத் தலைவர் வழக்குரைஞர் கார் கண்ணன் அவர்களுக்கும், அனைத்து நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அகம் கனிந்த நல் வாழ்த்துக்களையும், மகிழ்வினையும், நன்றியையும் மாவட்டக் கழகத் தலைவர் இரா.புகழேந்தி உள்ளிட்ட தோழர்கள் தெரிவித்துக் கொண்டனர்.
சிவகங்கை இராமச்சந்திரனார் நினைவுப்பூங்கா சீரமைப்பு
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books