சென்னை மின்சார ரயில் சேவை குறைப்பாம்: தென்னக ரயில்வே அறிவிப்பு!

1 Min Read

சென்னை, டிச.8- சென்னை கடற்கரை – தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே நாளை திங்கட்கிழமை (9.12.2024) முதல் மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்தாக உள்ளது மின்சார ரயில். சென்னையில் மூன்று வழித்தடங்களில் மின்சார ரயில் போக்குவரத்து இயங்குகிறது.

இந்நிலையில், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே வார நாட்களில் நாள்தோறும் 200 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், பராமரிப்புப் பணி காரணமாக, நாளை திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, திங்கட்கிழமை முதல் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே 125 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன. மேலும், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வழித்தடத்தில் 20 நிமிட இடைவேளைக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதே போன்று, செங்கல்பட்டில் இருந்து கடற்கரை வழித்தடத்தில் 30 நிமிடத்திற்கு ஒரு ரயில் சேவை இருக்கும் என தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *