மாவட்ட திராவிடர் கழக அலுவலகம் திறப்பு – கற்பி பயிலகக் கட்டடம் திறப்பு திருப்பத்தூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

திருப்பத்தூர், டிச.8- திருப்பத்தூர் நகரில் திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக அலுவலகம் திறப்பு, கற்பி பயிலகம் கட்டடம் திறப்பு, மண்டல தந்தை பெரியார் தொழிலாளரணி அமைப்பு கலந்துரையாடல் மற்றும் மாவட்ட கமிட்டி உள்ளிட பல்வேறு நிகழ்ச்சிகளில் 14.12.2024 அன்று காலை முதல் இரவு வரை கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்க உள்ளார்.

இந்நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்த கலந்துரை யாடல் கூட்டம் மாவட்ட தலைவர் இல்லத்தில் நேற்று (6.12.2024) காலை 11 மணியளவில் மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன், மாவட்டச் செய லாளர் பெ.கலைவாணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சி.ஏ.சிற்றரசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சி. தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் ஏ.டி.ஜி.சித்தார்த்தன், கந்திலி ஒன்றிய தலைவர் பெ.ரா.கனகராஜ், மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் க.மோகன், சோலையார்பேட்டை நகர அமைப்பாளர் இராஜேந்திரன், சோலையார்பேட்டை ஒன்றியத் தலைவர் தா.பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *