அருமருந்தாய் ஆசிரியர்!

viduthalai
1 Min Read
ஆண்டுகள் அய்ம்பதுக்கு
அப்பாலும் அய்ந்தைத்
தாண்டியும் அய்யாவுடன்
தவறாமல் தொடர்ந்தே
தூண்டிடும் உணர்வுகளால்
துவளாது நிற்கின்றேன்
வேண்டியத் தோழர்கள்
விடைபெற்றுச் சென்றாலும்
அய்யாவாம் ஆசிரியரின்
அடிதொடர்ந்து மகிழ்வுடனே
பொய்யாக வாழாமல்
பொலிவுடனே சிறக்கின்றோம்
மெய்யான அவர்வாழ்வே
மெலிவினத்தின் ஊன்றுகோலாம்
எய்திடுமோ என்றவற்றை
எளிதிலேப் பெறவைத்தார்
தந்தை பெரியாரின்
தாக்கத்தை கருத்தை
தரணி எங்கும்
பரவச் செய்தே
திராவிடக் கொள்கைக்கு
திசையெங்கும் வரவேற்பை
திரண்டிடச் செய்தவரை
திசைநோக்கி வணங்குகிறோம்
தொண்ணூற்று இரண்டினைத்
தொடுகின்ற நிலையிலும்
என்றுமே போலவரும்
எழுச்சிமிகு தெளிவுடன்
இருபத்தொன் பதெனவே
இருப்பதோ நமக்கு
அருமருந்தாய் கிடைக்கின்ற
அய்யாவை வாழ்த்துகிறோம்
– பி.பட்டாபிராமன், காப்பாளர்
திருவண்ணாமலை
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *