பேனர், கட்-அவுட், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது தொண்டர்களுக்குத் தி.மு.க. தலைமை உத்தரவு!

viduthalai
1 Min Read

சென்னை,டிச.7- தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதலமைச்சர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தலைவராக பொறுப்பேற்ற நாள் முதல் “தி.மு.க. பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு, போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள், கட்-அவுட்கள், பிளக்ஸ் “போர்டுகள் வைக்கக்கூடாது” என்று திமுக நிர்வாகிகள் அனைவரையும் ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தியிருக்கிறேன்.

இனி வருங்காலங்களில், எந்தவொரு இடத்திலும் முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் திமுக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் பேனர்கள், கட்-அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறிவுரையை யாரேனும் மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தலைமைக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *