இன்று (7.12.2024) சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற தமிழர் தலைவர் ஆசிரியரின் 92 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் (சுயமரியாதை நாள்) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும், அவரது இணையர் மோகனா அம்மையாருக்கும் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நூறு வயதிற்கு மேற்பட்ட பெரியார் பெருந்தொண்டர்கள் பெங்களூரு வீ.மு.வேலு (வயது 105), ஆத்தூர் ஏ.வி.தங்கவேல் (வயது 103), பொத்தனூர் க.சண்முகம் (வயது 102) ஆகியோருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை போர்த்தி, விருது வழங்கினார்.
நிகழ்வில் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், சிறப்பு விருந்தினராக வருகை புரிந்துள்ள தமிழ்நாடு எஸ்.பீட்டர் அல்போன்ஸ், பேராசிரியர் சுந்தரவள்ளி, வினோதினி (பெரியார் பன்னாட்டமைப்பு, அமெரிக்கா), கழகத் துணை பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி ஆகியோர் உள்ளனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்று, கரவொலி எழுப்பினர்.