ஆசிரியர் விடையளிக்கிறார்

3 Min Read

கேள்வி 1: இனி ஏக்நாத் ஷிண்டே அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்?

– க.சந்திரன், மதுரை

பதில் 1: அது அவருக்கே தெரியுமோ, தெரியாதோ? நாம் எப்படிக் கணிக்க முடியும்? பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கண்காணிப்பு அவருக்கும் நிரந்தரமாகவே இருப்பது நிச்சயம்!

– – – – –

கேள்வி 2: ‘படேகேதோ கடேங்கே’ என்று கூறியதை ஜார்க்கண்ட் மக்கள் புறந்தள்ளியது ஏன்?

– அ.கண்ணன், வேலூர்

பதில் 2: பழங்குடி மக்களுக்குள்ள அரசியல் தெளிவு பெருங்குடி – பெருநகர படித்த தற்குறிகளுக்கும் இனி வந்தால் சரி!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

– – – – –

கேள்வி 3: இதுவரை பெயரளவிற்கு பேரிடர் நிதி ஒதுக்கிய ஒன்றியம் இம்முறை (2023-2024) ஒரு பைசா கூட ஒதுக்காதது ஏன்?

– கி.மாசிலாமணி, நுங்கம்பாக்கம்

பதில் 3: இன்னும்கூட சற்று பொறுத்திருந்து பாருங்கள். “வெறும் வாயில் சுட்ட வடைதானா?” என்பதை!

– – – – –

கேள்வி 4: நாடாளுமன்றத்தில் தவறான தகவலைக் கூறிய நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்க முடியாதா?

– ச.வெற்றிமணி, காஞ்சி

பதில் 4: அவர் மீது சட்டப்படி நாடாளுமன்ற உரிமைக்குழு நடிவடிக்கை எடுக்கலாம். எங்கே நடைமுறை போகிறது?

– – – – –

கேள்வி 5: உத்தரப்பிரதேச மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடச் சென்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியை சாமியார் அரசின் காவல்துறை தடுத்து நிறுத்தியுள்ளதே?

– சூர்யகுமார், திண்டிவனம்

பதில் 5: நமது ஜனநாயகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கடமையைச் செய்வதைச் தடுப்பதா? எப்படி பார்த்தீர்களா?

– – – – –

கேள்வி 6: தொடர்ச்சியாக நடைபெறும் ரயில் விபத்துகள் குறித்து மக்களவை உறுப்பினர் கனிமொழி மக்களவையில் கவலை தெரிவித்துள்ளாரே? ஒன்றிய ரயில்வே அமைச்சகம் சிந்திக்குமா?

– வேலுச்சாமி, புதுக்கோட்டை

பதில் 6: கேளாக் காது; பார்க்காப் பார்வை; புரியாப் பிடிவாதம் – ரயில்களுக்கு நம் நாட்டில் இப்படி ஒரு ‘சுதந்திரம்’? வருத்தத்திற்குரியது, கண்டனத்திற்குரியது.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

– – – – –

கேள்வி 7: தமிழ்நாட்டைப் போன்றில்லாமல் – மாநிலத் தேர்தல்கள் முடிவடைந்த பின் முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதில் வட மாநிலங்களில் இழுபறிகள் நாட்கணக்கில் நடைபெறுகின்றனவே?

– முகுந்தன், ஒசூர்

பதில் 7: ஆம். கூடா நட்பும் பதவி வெறி அரசியலும் ஏற்படுத்தும் நிலைமைகள், அரசியல் ‘வியாதிகள்’ – அரசியல் ‘வாதிகளானால்’ நல்லது!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

– – – – –

கேள்வி 8: ‘விளையாட்டுத் துறையில் முன்னணி மாநிலம்’ என்ற விருதை தமிழ்நாட்டுக்குப் பெற்றுத் தந்துள்ள துணை முதலமைச்சரின் சாதனை குறித்து?

– ஆறுமுகம், தாம்பரம்

பதில் 8: போற்றி வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பலே! பலே!!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

– – – – –

கேள்வி 9: பெண் தொழில் முனைவோரை உருவாக்குவதில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது சாதனைதானே?

– அன்புமொழி, வந்தவாசி

பதில் 9: ‘திராவிட மாடல்’ ஆட்சியின் கிரீடத்தில் மற்றொரு முத்து!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

– – – – –

கேள்வி 10: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையின்போது, அரசியல் சாசனத்தின் மூலம் சமூகநீதியை எட்டி உள்ளோம் என்கிறார்களே, இது உண்மையா?

– எஸ்.நல்லபெருமாள், வடசேரி

பதில் 10: அவரவர் மனசாட்சிதான் இதற்குத் தகுந்த பதில் கூற முடியும்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *