ஸநாதனத்தின் முன் தோற்றுப்போன ஷிண்டே

1 Min Read

மகாராட்டிராவில் 23.11.2024 அன்று தேர்தல் முடிவுகள் வெளியானது. அன்று மாலையே முழு பலம் பெற்றது பாஜக கூட்டணி.
ஆனால் முதலமைச்சர் தேர்வில் சிக்கல் துவங்கியது. ஆக்ஸிடெண்டல் முதலமைச்சரான ஏக் நாத் ஷிண்டே ” நான்தான் முதலமைச்சர் ” என்று தொடர்ந்து அடம்பிடித்தார். டில்லி வரை சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். திடீரென நான் முதலமைச்சர் பதவியில் இருந்து இறங்கினால் எனது ஆதரவாளர்கள் எதிர்ப்பார்கள் என்று கூறி நான் அடுத்த சில ஆண்டுகளுக்கு முதலமைச்சராக இருக்கிறேன்” என்று கெஞ்சிப்பார்த்தார். ஆனால், டில்லியோ சிபிஅய், ஈடி போன்ற காய்களை அவரது கண் முன்னே உருட்டி பயமுறுத்தியது.

“6 மாதங்களுக்கு மட்டும் முதலமைச்சராக இருக்கிறேன்..” என்றார். முடியாது என்றது டில்லி. திடீரென சொந்த ஊருக்குச் சென்று அலைபேசியை அணைத்து வைத்துப் பார்த்தார். ஆனால், தேவேந்திர பட்னாவிஸ் வீட்டிற்கே சென்று மிரட்டினார். பணிந்தார். அடுத்து நிதிஷ் குமாரின் நம்பர்தான் என்று சொல்கிறார்கள். அடுத்த ஆண்டு பீகார் தேர்தல் முடிவுகள் விடை கூறலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *