ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

24.7.2023

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* தற்போது மணிப்பூர் மாநிலத்தில் ஆசிய விளை யாட்டு, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் போன்ற தேசிய மற்றும் பன்னாட்டு போட்டி களுக்கு பயிற்சி அளிக்க சாதகமற்ற சூழ்நிலை நிலவுவ தால், அம்மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், தமிழ்நாட்டில் பயிற்சி மேற்கொள்ளலாம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

* ம.பி.யில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கமல் நாத் அறிவிப்பு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு பேருந்துப் பயணம் இலவசம் என முதலமைச்சர் பூபேஷ் பாகேல் வாக்குறுதி

தி இந்து:

* மணிப்பூர் வன்முறை இந்தியாவின் கூட்டாட்சி, பன்மைத்துவத்தின் மீதான தாக்குதலைக் குறிக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதா ராம் யெச்சூரி கண்டனம்.

தி டெலிகிராப்:

* மணிப்பூர் நெருக்கடியை முன்னிலைப்படுத்தி பாஜகவுக்கு எதிராக மக்கள் கருத்தை உருவாக்க திரிணா முல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது

* வடகிழக்கு மாநிலத்தில் குக்கி சகோதரர்கள் எவ் வாறு குறி வைக்கப்படுகிறார்கள் என்பதை வங்காளத்தில் உள்ள பழங்குடியினருக்கு தெரிவிக்கவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

* டில்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் அவசரச் சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. மாநிலங்கள வையில் தாக்கல் செய்ய மோடி அரசை அனுமதிக்க வேண்டாம் என ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகவ் சதா மாநிலங்களவை தலைவருக்கு கடிதம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* அமைதியான வடகிழக்கு மாநிலத்தை கலவர பூமியாக மாற்றும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நாட்டில் உள்ள அனைத்து மதச்சார்பற்ற எண்ணம் கொண்டவர்களும் எழ வேண்டும் – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *