முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பெரியார் அறக்கட்டளைகளின் சார்பில் ரூ.5 லட்சம் நன்கொடை!

0 Min Read

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயலால் கடந்த நவம்பர் 30 அன்று அடாது பெய்த கன மழை காரணமாக வரலாறு காணாத அளவில், சென்னை உள்ளிட்ட அய்ந்து மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பெஞ்சல் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக மாண்புமிகு மானமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு
பெரியார் மணியம்மை உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
ரூ.2 லட்சமும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் ரூ.2 லட்சமும்
மற்றும் திராவிடர் கழகம் அறக்கட்டளை ரூபாய் ஒரு லட்சமும் – ஆக மொத்தம்
ரூ.5 லட்சம் (அய்ந்து லட்சம்) நன்கொடையாக இணைய வழியில் வழங்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *