ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்: குமரி மாவட்ட கழகம் பங்கேற்பு

1 Min Read

அரசியல்

குமரி, ஜூலை 24– அரசமைப் புச் சட்டத்தின் அடிப்ப டைக் கொள்கையான மதச்சார்பின்மைக்கு விரோதமாகவும், தமிழ் நாட்டு வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டு அரசிற்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்க குடியரசு தலைவ ருக்கு கடிதம் அனுப்பும் கையெழுத்து இயக்கம் குமரிமாவட்ட மதிமுக சார்பில் நடந்து வருகின் றது.

 அந்த கையெழுத்து இயக்கத்தில் குமரி மாவட்ட திராவிடர்கழக மாவட்டத்  தலைவர் மா.மு.சுப்பிரமணியம் கையெழுத்து இயக்கத் தினை தொடங்கி வைத் தார். மாவட்டச் செயலா ளர் கோ.வெற்றி வேந்தன்,  கழகக் காப்பாளர் ஞா.பிரான்சிஸ்,  மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் ம.தயாளன், மா.மணி  துணைத் தலைவர் ச.நல்ல பெரு மாள், இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னு ராசன் இளைஞரணித் தலைவர் இரா.இரா ஜேஷ்  மாவட்ட கழக மகளிர் அணி தலைவர் சு.இந்திரா மணி, நாகர் கோவில் மாநகர திரா விடர் கழக செயலாளர் மு.இராஜசேகர், தலை வர் ச.ச.கருணாநிதி, திரு வட்டார் ஒன்றிய செய லாளர் டார்ஜன், திரா விட நட்புக்கழக மாவட்ட பொறுப்பாளர் 

செ.விஷ்ணு, தோழர்கள் ம.தமிழ்மதி, பி.கென்னடி பங்கேற்று கையெழுத்திட் டனர். ம.தி.மு.க மாவட் டச் செயலாளர் வழக் குரைஞர் எஸ்.வெற்றிவேல், இளைஞரணி மாநில துணை  செயலாளர் அரி ராம ஜெயம் மற்றும் தோழர் கள் ஒருங்கிணைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *