விண்வெளி ஆராய்ச்சிக்கு இந்திய ஏ.அய். ஆய்வகம்!

2 Min Read

விண்வெளியில் அய்தராபாத்தைச் சோ்ந்த ‘டேக் மீ 2 ஸ்பேஸ்’ என்ற புத்தாக்க நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) ஆய்வகத்தை நிறுவவுள்ளது. இதற்காக அடுத்த மாதம் விண்வெளிக்கு இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட் அனுப்பப்படவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்ப தாவது: விண்வெளி ஆராய்ச்சியை எளிதாக அணுகவும் குறைந்த விலையில் மேற்கொள்ளும் விதமாகவும் சுற்றுப்பாதை உள்கட்டமைப்பு- தொழில்நுட்ப விளக்கமாதிரி (எம்ஓஅய்-டிடி) என்ற ஏ.அய். ஆய்வகம் அமைக்கப்படவுள்ளது. இதுவே விண்வெளியில் இந்தியா அமைக்கும் முதல் ஏ.அய். ஆய்வகமாகும்.

எம்ஓஅய்-டிடி, இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-60 ராக்கெட் மூலம் டிசம்பா் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளது. மேக மூட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் செயற்கைக்கோள்கள் அனுப்பும் 40 சதவீத தரவுகளை அணுக முடியவில்லை. அதேசமயத்தில் பூமியில் உள்ள மய்யங்களுக்கு அனுப்பப்பட்டு அதன்பிறகே அந்த தரவுகளை பெறும் சூழல் உள்ளது. இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எனவே, விண்வெளியில் நேரடியாகவே இந்த தரவுகளை அணுகி பயனாளா்களுக்கு சரியான தகவல்களை வழங்கவும் தரவுகள் பரிமாற்ற செலவு மற்றும் தாமதத்தை குறைக்கவும் இந்த ஆய்வகம் நிறுவப்படவுள்ளது. ‘ஆா்பிட்லேப்’: சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு மற்றும் காடுகள்அழித்தல் கண்காணிப்பு, கடல்சார் பணிகள் மேற்பார்வை, கரியமிலவாயு உமிழ்வு கண்டறிதல் உள்ளிட்ட புவி கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடா்பாக எம்ஓஅய்-டிடி வெளியிடும் ஏ.அய். தகவல்களை ‘ஆா்பிட்லேப்’ என்ற வலைதளத்தில் பயனாளா்கள் பெறலாம். இந்த ஆய்வகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் பணியில் முதல்கட்டமாக மலேசியாவில் உள்ள ஒரு முக்கிய பல்கலைக்கழகமும், இந்தியாவிலிருந்து 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா் குழுவினரும் இணைந்துள்ளன.

வருங்காலத்தில் விண்வெளியில் தரவுகள் மய்யம் அமைப்பதற்கான முன்னோடியாக இந்த ஆய்வகம் திகழவுள்ளது. தற்போது புவி கண்காணிப்பு சார்ந்த ஆய்வுகளே செய்யப்படவுள்ள நிலையில் வருங்காலத்தில் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு துறைகளுக்கு பலனளிக்கும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது. இந்த ஆய்வகத்தின் பரிசோதனைகள் மற்றும் மதிப்பீடுகளை விண்வெளியில் தனியார் துறை பங்களிப்பை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இஸ்ரோவின் கிளை பிரிவான ‘இன்-ஸ்பேஸ்’ அமைப்பே மேற்கொண்டது என தெரிவிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *