செய்திச் சுருக்கம்!

viduthalai
1 Min Read

நூலக மாநாடு

உலக நாடுகளுக்கு இடையே நூலக கூட்டுறவு, தகவல் பரிமாற்றம் மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தியாவில் முதல்முறையாக அடுத்தாண்டு 5.2.2025 முதல் 7.2.2025ஆம் தேதி வரை ‘நூலக நல்லுறவு’ என்ற தலைப்பில் பன்னாட்டு நூலக உச்ச மாநாடு டில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பன்னாட்டு மய்யத்திலும் தெற்கு ஆசிய பல்கலைக்கழக வளாகத்திலும் நடைபெற உள்ளது.

உத்தரவு

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் 31க்குள் ஓர் அதிகாரியை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பரிசீலனை

சி.பி.எஸ்.இ. ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2 விதமான அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றது என ஒன்றிய அரசின் இடைநிலைக் கல்வி வாரியம் தகவல்.

சிறப்பு விடுப்பு

குருதிக் கொடை செய்யும் ரயில்வே ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு அளிக்க ரயில்வே துறை அனுமதி அளித்துள்ளது. மேலும், குருதிக் கொடை செய்யும் ரயில்வே ஊழியர்கள் ஆண்டுக்கு 4 சிறப்பு விடுப்புகள் எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *