ஃபெஞ்சல் புயலால் கிருஷ்ணகிரியில் 300 ஆண்டு இல்லாத அளவு மழை பெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புயல் எதிர்பார்த்ததை விட மிகவும் மெதுவாக நகர்ந்து சென்றதால், பல பகுதிகளில் இதுவரை இல்லாத அளவு அதிக மழை பெய்திருப்பதாக தனியார் வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட இடங்களில் 24 மணிநேரத்தில் 50 சென்டி மீட்டருக்கும் மேல் மழைப் பதிவாகியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.