பெரியார் விடுக்கும் வினா! (1502)

viduthalai
1 Min Read

விஞ்ஞான வளர்ச்சி காரணமாகச் சமத்துவம் சமூகத்திலே உண்டாக மார்க்கம் ஏற்பட்டுவிட்டது அல்லவா? நாம் என்ன கூறினாலும், இனிமேல் நமது பின் சந்ததியார்கள் பழைய தொழில் முறை, ஜாதி முறை திட்டங்களை ஏற்றுக் கொள்வார்களா? உலகம் இன்று புதிய பாடத்தைக் கற்பித்துக் கொண்டு, விஞ்ஞான வளர்ச்சி மூலமாகவே விமோசனம் ஏற்படும் என்ற உறுதி எனக்கு ஏற்பட்டிருக்கிறது. பழைமையான சகல முறைகளிலும் மாற்றங்களும், சகல துறைகளிலும் புதுமையும் தோன்றி வரும் நிலையில் வெகு சீக்கிரத்தில் புதிய உலகம் காணப் போவதில் தடைகளை ஏற்படுத்த யாரால் இயலும்?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *