கரூர், டிச.4 கரூர் மாவட்டம் தாந்தோணி மலை ஊரணி காளியம்மன் ஆலயத்தில் அய்யப்பா சேவா சங்கம் அறக்கட்டளையின் சார்பாக ஏழாம் ஆண்டு தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 7 மணிக்கு 7 கன்னிகளுக்கு அருள் அழைத்து நெய் விளக்கு ஏந்துதல் நிகழ்ச்சி நடைபெற்ற பின்னர் இரவு 7 மணி அளவில் அய்யப்ப பக்தர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறுவர் சிறுமிகள் என இருபதுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு தீயை மிதித்தனர். இதில் பல குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டது. சிலர் அழுத குழந்தைகளை தூக்கிக் கொண்டு தீ மிதித்தனர். இறுதியாக ஏழு கன்னிப் பெண்கள் தீயை மிதித்தனர். இந்தக் கொடூர செயலை அய்யப்பா சேவா சங்கத்தினர் செய்திருந்தனர். பக்தி வந்தால் புத்தி போகும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
சிறுவர் சிறுமிகளையும் தீ மிதிக்க வைத்த கொடுமை!
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books