பேராசிரியர் முனைவர் கஸ்தூரிபாய் மனோகரன் அவர்களுக்கு நமது வீர வணக்கம்!

1 Min Read

அரசியல்

இன்று (24.7.2023) மது ரையில் உள்ள நமது தலைமைக் கழக அமைப் பாளர் மானமிகு தோழர் செல்வம் அவர்கள் அனுப் பிய மின்னஞ்சல் செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி யடைந்தேன்.

மறைந்த நமது கெழுதகை கொள்கைத் தோழர் ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் மனோகரன் (தூத்துக்குடி) அவர்களது துணைவியார் ஓய்வு பெற்ற பேராசிரியர் – முதல்வர் திருமதி கஸ்தூரிபாய் அவர்கள் (வயது 78) நேற்று (23.7.2023) இரவு 8 மணியளவில் மதுரையில் இயற்கை எய்தினார் என்ற செய்திதான் அது!

பேராசிரியர் கஸ்தூரிபாய் அவர்கள் பண்பாளர், தலைசிறந்த கல்வியாளர் ஆவார்.

தோழர் மனோகரன் காலமாகி சில ஆண்டுகள் ஆயினும்கூட, அவர் ஒவ்வொரு ஆண்டும் – அவர் விருப்பப்படியும் – தன் விருப்பப்படியும் 

ரூ.50 ஆயிரம் நன்கொடையாக நமது பெரியார் அறக்கட்டளைக்கு அனுப்பத் தவறவே மாட்டார்; அத்தகைய கடமை உணர்ச்சியாளர் அவர்.

அவரை இழந்துவாடும் அக்குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் உரித்தாக்கு கிறோம்.

அவரது இழப்பு இயக்கத்திற்கு ஒரு முக்கிய இழப்பு!

அவருக்கு நமது வீரவணக்கம்!

கி. வீரமணி 

 தலைவர்,

திராவிடர் கழகம்  

முகாம்: மலேசியா – கோலாலம்பூர்          

24.7.2023திராவிடர் கழகம் 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *