இந்தியாவிலேயே நாட்டு நலப் பணி திட்டத்தில் முதலிடம் தமிழ்நாடே! அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெருமிதம்

viduthalai
1 Min Read

திருச்சி, டிச.2- இ.ஆர்.மேல்நிலைப் பள்ளியில் அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா இன்று(30-11-2024) நடந்தது.
விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து அன்பில் கிராமத்தில் நடைபெற்ற நாட்டு நலப்பணி திட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அன்பில் அறக்கட்டளையின் சார்பாக பரிசு வழங்கப்பட்டது.

அப்போது அமைச்சர் பேசியதாவது:- இந்தியாவிலேயே நாட்டு நலப்பணி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலம் தமிழ்நாடு தான். மாணவர்கள் தங்களது தனி திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். சக மாணவர்கள் பாடங்கள் சம்பந்தமான சந்தேகங்களை கேட்கும்போது விளக்கி அவர்களையும் தேர்வில் வெற்றி பெறச் செய்ய உதவ வேண்டும். நம் முதலமைச்சர் கூறுவது போன்று மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவன செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், மாநகராட்சி மண்டல குழு தலைவர் மு.மதிவாணன், மாமன்ற உறுப்பினர் தசரதன் தங்கலட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் குமார், பள்ளி செயலர் ராகவன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *