மலேசியா திராவிடர் கழகம் வாழ்த்து

1 Min Read

சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்ற தத்துவத்தின் அடித்தளத்தில் இருந்து, தந்தை பெரியார் விட்டுச் சென்ற சமூக சீர்த்திருத்தப் பணிகளை தன் தோள்மீது சுமந்து பீடு நடைப் போட்டு வரும் தமிழ்நாடு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தனது 92 ஆம் ஆண்டுப் பிறந்தநாளை கொண்டாடுவதை எண்ணி அகம் மகிழ்கிறேன்.
திராவிடர் கழகத் தலைவர் என்ற பொறுப்பில் சீராகவும் சிறப்பாகவும் செம்மையாகவும் தனது கடமையை நிறைவேற்றி வரும் தமிழர் தலைவருக்கு 92 ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்தினை பதிவு செய்வதில் மலேசியத் திராவிடர் கழகத் தேசியத் தலைவர் என்ற வகையில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
தனது 92ஆவது அகவையிலும் இளம் சிறுத்தையைபோல் ஓடி ஆடி பாய்ந்து சென்று கழகப் பணி செய்துவரும் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வளமாகவும் களமாகவும் சுகமாகவும் தந்தை பெரியாரின் பணி செய்து உலக தமிழர்களின் ஈடு இணையற்ற பகுத்தறிவு கதிராக ஒளிவீச வேண்டும் என்று வாழ்வாங்கு வாழ்த்துகிறேன்.

என்றும் அன்புடன்
டத்தோ ச.த.அண்ணாமலை
தலைவர், மலேசிய திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *