சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்!

1 Min Read

சென்னை, டிச.1 சென்னை கிண்டி மடுவின்கரை பகுதியில் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. சென்னையில் 200 மருத்துவ முகாம்களும் மற்ற 6 மாவட்டங்களில் தலா 50 மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது.
காய்ச்சல், சளி, பரிசோதனை, ரத்த கொதிப்பு உள்ளிட்ட பாதிப்புக்கு அடிப்படை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி 7 மாவட்டங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் ஒன்றரை மாதமாக நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமில் 28.02 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்’’ என்று அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *