வேதவல்லி மறைவு கண் மற்றும் உடற்கொடை

1 Min Read

புவனகிரி, நவ.30 திருவொற்றியூர் கழகத் தோழர் சேகரின் தாயார் மற்றும்கழக மகளிர் அணியை சேர்ந்த தமிழரசி சேகர் மாமியார் வேதவல்லி மாரிமுத்து (வயது 83) புவனகிரி அருகில் உள்ள பூதவராயன் பேட்டையில் நேற்று (29.11.2024) பிற்பகல் 2.30 மணி அளவில் மறைவுற்றார். அவரின் கண்கள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்குக் கொடையாக அளிக்கப்பட்டன. அவரின் உடல் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது

இன்று (30.11.2024) காலை 11 மணி அளவில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் மற்றும் கழகப் பேச்சாளர் புலவர் இராவணன், குறிஞ்சிப்பாடி கழகத் தலைவர் தா. கனகராசு வடலூர் கழக துணை நிர்வாகி தீன மோகன், மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் மேகநாதன் கழக சொற்பொழிவாளர் யாழ். திலீபன் ஆகியோர் அவரின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *