சுயமரியாதை நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவோம்! விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கூட்டத்தில் தீர்மானம்

1 Min Read

செஞ்சி, நவ.29- விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் கடந்த 24.11.2024 அன்று செஞ்சி – இராஜா தேசிங்கு தெரு, பெரியார் பெருந்தொண்டர் – துளசி இல்லத்தில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் துரை. திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது. பெ.பாரதி வரவேற்புரை நிகழ்த்தினார். விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் வ.கோபன்னா மற்றும் மாவட்ட செயலாளர் இரா.பரணிதரன் முன்னிலை வகித்தனர். மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கு.ரஞ்சித் குமார் நோக்கவுரை நிகழ்த்தினார். தலைமைக் கழக அமைப்பாளர் தா.இளம்பரிதி வாழ்த்திப் பேசினார். சிறப்பு அழைப்பாளராக பகுத்தறிவாளர் கழக மாநில செயலாளர் வி.மோகன் சிறப்புரை ஆற்றினார்.

டிசம்பர் – 2, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92-ஆவது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது என்றும்,
டிசம்பர் – 28, 29 ஆகிய நாள்களில் திருச்சியில் நடை பெறும் இந்திய பகுத்தறிவாளர் கூட்டமைப்பின் 13 ஆவது மாநாட்டில் தோழர்கள் பெருமள வில் கலந்து கொள்வது என்றும்,
‘விடுதலை’ – சந்தா பெரு மளவு எண்ணிக்கையில் கூடுத லாக சேகரிப்பது என்றும் தீர்மா னிக்கப்பட்டது.
புதிய மாவட்ட பொறுப்பா ளர்களாக தலைவர் துரை.திரு நாவுக்கரசு, செயலாளர் சிவராஜ், அமைப்பாளர் பெ.பாரதி, துணைத் தலைவர் க.கவுதமன், துணைச் செயலாளர் சுடரொளி சுந்தரம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
கலந்துகொண்டவர்கள்: இர.அன்பழகன், இ.இராஜேந்திரன், கொ.பூங்கான், செக்கடிக்குப்பம் காத்தவராயன், இர.தவமணி, வீர.சுஜித்ரா, அ.பாலச்சந்தர், க.அறிவுடைநம்பி, கு.கிருஷ்ண மூர்த்தி, ஏ.பெருமாள், த.இராவ ணன், நவா.ஏழுமலை, ம.சங்கர், இர.பெருமாள், மு.தயாநிதி. நிறை வாக நந்தகுமார் நன்றி கூறினார்.

திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *