வள்ளுவர் கோட்டம் – புனரமைக்கப்பட்டு வரும் பணிகள்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

viduthalai
3 Min Read

சென்னை, நவ. 29- சென்னை வள்ளுவர் கோட்டம் புனரமைக்கப்பட்டு வரும் பணிகளை, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

“திருக்குறள்“ என்ற தமிழ் இலக்கியத்தை, 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் படைத்த “அய்யன் திருவள்ளுவருக்கு“ ஒரு வரலாற்று நினைவுச் சின்னமாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால், சென்னை மாநகரில் 5 ஏக்கர் பரப்பளவில் 18.9.1974 அன்று அடிக்கல் நாட் டப்பட்டு, 1976 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது.

திருவாரூர் ஆழித்தேரை மாதிரி வடிவமாக கொண்டு, பல்லவக்கலை சிற்ப வேலைப் பாடுகளுடன் கல்தேரும், (உயரம் 128 அடி), காந்தார கலை வடிவில் தோரண வாயிலும், திராவிட கட்டடக் கலை பிரதிபலிக்கும் வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் சிற்பி கணபதி அவர்களைக் கொண்டு இரண்டு ஆண்டுகளில் “வள்ளுவர் கோட்டம்“ அமைக்கப்பட்டு, சுற்றுலாத் தலமாக இருந்தது.

முந்தைய ஆட்சியாளர்களால், பராமரிக்கப்படாததால், சிதில மடைந்து, பொலிவை இழந்து மோசமான நிலையில் இருந்ததை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வள்ளுவர் கோட் டத்தை புனரமைக்க ரூ.80 கோடி வழங்கி, 18.1.2024 அன்று பணி துவங்கப்பட்டது.
பொதுப்பணித்துறை மூலமாக நடைபெற்று வரும் இப்பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று (28.11.2024) நேரடியாக களத்திற்குச் சென்று நடைபெற்று வரும் வள்ளுவர் கோட்டம் புனரமைக்கும் அனைத்து பணிகளையும் ஒவ்வொன்றாக ஆய்வு செய்தார்.

தற்போது நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளான, கலையரங்கம், குறள்மணி மாட கூரை புனரமைப்பு, தரைகள் புதுப்பித்தல், குறள் மணிமாட ஓவியம் சீரமைத்தல், வளாக சுற்றுச் சுவர் புதுப்பித்தல், தூண்கள், நுழைவாயில் பகுதிகளில் சிற்ப வேலைப்பாடுகள், மாற்றுத் திறனாளிகள் நடைபாதை, முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தேயக மின் தூக்கி, பலநிலை வாகன நிறுத்துமிடம், உணவுக்கூடம், விற்பனை மய்யம், மழைநீர் வடிகால் வசதி, 2 இலட்சம் கொள்ளளவு நீர் சேமிப்பு தொட்டி அமைத்தல், பேவர் பிளாக் பாதை அமைத்தல், ஆர்.ஓ. பிளான்ட் அமைத்தல், புல்வெளி அமைத்தல், செயற்கை நீரூற்று அமைத்தல், ஒளி ஒலி காட்சி அமைத்தல், சிதிலமைடைந்த மின்சாதனங்கள், மின் இணைப்புகள் மாற்றுதல், கூட்ட அரங்கம் மற்றும் குறள்மணி மாடத்தில் குளிர்சாதன வசதி, தீ தடுப்பு வசதிகள், ஒலிபெருக்கி அமைப்பு நிறுவுதல், நுழைவாயில் புதுப்பித்தல் பணி, உயர் அழுத்த மின் வசதி, 250 கே.வி.ஏ. ஜெனரெட்டர், சி.சி.டி.வி. பொருத்துதல் ஆகியவற்றின் பணி முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.

தோரணவாயில் முகப்பில், அழகு மிளிரச் செய்யும் ஸ்தபதிகளின் பணிகளை பார்வையிட்டு, துரிதமாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய பின், உணவகம், நிர்வாகக் கட்டடம், தள கற்கள் பதிக்கப்பட்டு வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், அப்பணிகளை எழிலுற செய்யத் தக்க அறிவுரைகள் வழங்கினார்.

மின் பணிகள் 80% சதவீதம் முடிவடைந்ததை ஆய்வு செய்து, மனநிறைவு அடைந்த அமைச்சர் அவர்கள், கலையரங்கம், குறள் மணிமண்டபம், தோரணவாயில் கட்டடங்களில் நடைபெற்று வரும் மின் பணிகளையும் ஆய்வு செய்து, இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பல்லடுக்கு வாகன நிறுத்துமிட கூரை கான்கிரீட் போடப்பட்டுள்ளதை பார்வை யிட்டு, கலையரங்கத்தில் பால்ஸ் சீலிங் பணி மற்றும் வால்பேனலிங் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணி யாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். இதுவரை மொத்தமாக 75% சதவீதப் பணிகள் நிறைவு பெற்றுவிட்டது என்பதால், மனநிறைவு அடைந்த அமைச்சர், வள்ளுவர் கோட்டத்தில் பொது மக்கள், பார்வையாளர்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகளை, பொதுப்பணித்துறை பொறியாளர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *