மறைவு

1 Min Read

காரைக்குடி கழக மாவட்ட தோழரும், தமிழர் தலைவர் ஆசிரியர் மீது மிகுந்த பற்றுக் கொண்டவருமான வீ.பாண்டியராஜன் (வயது89) இன்று (29.11.2024) அதிகாலை மறைவற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். காரைக்குடி கழக மாவட்ட நிகழ்வுகளுக்கு பெருமளவில் நன்கொடை அளித்து ஆதரவாக இருந்தவர். இவரது குடும்பத்தில் நான்கு பேர் திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்தவர்கள். அன்னாரது இறுதி நிகழ்வு இன்று மாலை 5 மணிக்கு காரைக்குடியில் நடைபெற்றது. காரைக்குடி மாவட்ட கழக தோழர்கள் காப்பாளர் சாமி திராவிடமணி தலைமையில் இறுதி மரியாதை செலுத்தினர்.

• • • • •

மறைவு

கும்பகோணம் கழக மாவட்டம் பாபநாசம் ஒன்றிய கழகம் உம்பளாபாடி திராவிடர் கழக பொறுப்பாளரும், பாபநாசம் திராவிடர் சமுதாய நல கல்வி அறக்கட்டளை உறுப்பினரும் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளருமான சா.வரதராஜன் அவர்களுடைய இளைய மகன் கிட்டு என்கிற வ.லெனின்(வயது30) நேற்று (28.11.2024) மதியம் இயற்கை எய்தினார். அவரின் இறுதி நிகழ்வு இன்று (29.11.2024) மாலை உம்பளாபாடியில் நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *